மாநகர சபை உறுப்பினரின் முயற்சியினால் குழாய் நீர் இணைப்பு நிர்மாணப் பணிகள்


தாமரைக்கேணி கனகசூரியம் பூசகர் வீதிக்கு மனித வாழ்விற்கு மூலாதாரமாகக் காணப்படும் குடி நீரை   குழாய் மூலம் பெறுவதற்கான நீர் இணைப்பு நிர்மாணப் பணிகள் இன்று (13) இடம்பெற்றன.

மட்டக்களப்பு மாநகர சபையின் 10 ஆம் வட்டார உறுப்பினர் சிவம் பாக்கியநாதனின் முயற்சியினால் தேசிய நீர் வளங்கல் வடிகாலமைப்புச் சபையின் மட்டக்களப்பு அலுவலகப் பணியாளர்களால் குறித்த வீதிக்கு குழாய் நீர் இணைப்பு செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

ஓவ்வோரு குடியிருப்பாளரும் தலா ரூபாய் 8000 ஆயிரம் செலுத்துவதன் மூலம் குழாய் நீர் இணைப்பைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் இத்திட்டத்தினால் குறித்த வீதியில் உள்ள சுமார் 20 குடும்பங்கள நன்மையடையவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.