பலப்பிட்டிய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலைப் போல குழப்பமான முறைமையில் இல்லாமல், மாகாண சபைத் தேர்தலை பழைய முறைமையிலேயே நடத்த வேண்டும்.
மாற்றங்கள் எதுவும் மேற்கொள்ள வேண்டுமாயின், அடுத்த தேர்தலை மாற்றங்களுடன் நடத்தலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அனைவரும் இணைந்து புதிய முறைமையை அறிமுகப்படுத்தியிருந்தாலும்,
பெரும்பான்மையைப் பெற்ற தரப்பினருக்கு ஆட்சியமைக்க முடியாத நிலைமை ஏற்பட்டிருந்ததாக அகிலவிராஜ் காரியவசம் சுட்டிக்காட்டியுள்ளார்.