நேற்று இரவு(29) இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
உந்துருளியில் பயணித்த தாயும், மகனும் வீதியின் நடுவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கெப் வண்டியில் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் நாச்சதுவ பிரதேசத்தை சேர்ந்த 54 வயதான தாயும், 27 வயதான மகனுமே உயிரிழந்துள்ளனர்.
கெப் வண்டியை செலுத்தியவருக்கு சாரதி அனுமதி பத்திரம் இல்லை என காவல்துறை மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறை மேற்கொண்டு வருகிறது.