கிரான்குளத்தில் நடைபெற்ற அறநெறிப் பாடசாலை விழிப்புணர்வு ஊர்வலம்



( M.பிரியங்கன்)
இந்து கலாசார திணைக்களம் மற்றும் மண்முனை பற்று பிரதேச செயலகத்தின் பணிப்புரைக்கு அமைய கிரான்குளம் இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் மாபெரும் அறநெறி விழிப்புணர்வு ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை (17) அன்று கிரான்குளத்தில் இந்து இளைஞர் மன்றத் தலைவர் த. நரேந்திரநாதன் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில்  உதவி பிரதேச செயலாளர், பிரதேச கலாசார அபிவிருத்தி உத்தியோகஸ்தர், அறநெறிபாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், இந்து இளைஞர் மன்றம், ஆலய பரிபாலன சபையினர், மற்றும் கிராம மக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.