தந்தையே குழந்தையை கடத்தியதால் பரபரப்பு! கடத்தியதன் காரணத்தை வெளியிட்டார்!


வவுனியாவில் காணாமல் போன 8 மாத குழந்தை புதுக்குடியிருப்பு பகுதியில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

வவுனியா குட்செட் பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து கடத்திச்செல்லப்பட்ட 8 மாத குழந்தையை தாமே கடத்திச் சென்றதாக குழந்தையின் தந்தை தெரிவித்துள்ளார்.

வவுனியா காவல்துறையினருக்கு அவர் தொலைபேசி மூலம் இதனை தெரிவித்துள்ளார்.

குழந்தையின் தாய் தமது குழந்தையை தொலைபேசி மூலம் காண்பிக்க மறுத்ததன் காரணமாகவே தாம் குழந்தையை கடத்திச் சென்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், குழந்தை நலமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குழந்தையின் தந்தை என கூறிக் கொண்ட குறித்த நபரின் தொலைபேசி இலக்கம் காவல்துறை பொறுப்பதிகாரியின் கையடக்க தொலைபேசியில் பதிவாகா வண்ணம் தொடர்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குழந்தையை உடனடியாக காவல்துறையினரிடம் கையளிக்குமாறு இதன்போது காவல்துறையினரால் கோரப்பட்டது.

குழந்தையை கடத்திச்சென்றதாக தாயால் சந்தேகிக்கப்படும் குழந்தையின் தந்தை, விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியென்றும், அவர் இங்கிலாந்திலேயே வசித்துவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையிலேயே வவுனியாவில் கடந்த வியாழனன்று கடத்தப்பட்ட 8 மாத கைக்குழந்தை முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.