திக்கோடையில் கஞ்சாவுடன் இரு இளைஞர்கள் கைது!


மட்டக்களப்பு – வெல்லாவெளி பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள திக்கோடை பிரதேசத்தில் கஞ்சாவுடன் 2 இளைஞர்களை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு கைது செய்துள்ளதாக வெல்லாவெளிப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விடையம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த பிரதேசத்திலுள்ள வீடுகளை சோதனையிட்ட போது 1500 மில்லிகிராம் பெறுமதியான கஞ்சாவை மீட்டுள்ளதுடன் இருவரையும் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் 22 மற்றும் 24 வயதுடைய இளைஞர்கள் எனவும், இவர்களை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் வெல்லாவெளிப் பொலிஸார் தெரிவித்தனர்.