பிரதியமைச்சரை துரத்திய காட்டு யானை !! (படங்கள்)

காயமடைந்த காட்டு யானைக்கு சிகிச்சையளிக்க சென்ற வனஜீவராசிகள் பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும மீது அந்த யானை தாக்குதல் நடத்த முயற்சித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

திம்புலாகல, நவமில்லான, இத்தபிச்சவெவ பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சுமார் 100 மீற்றர் தூரம் வரை பிரதியமைச்சரையும் சிகிச்சையளிக்க சென்ற குழுவினரையும் அந்த யானை துரத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பின்னர் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் வைத்தியர்களும் இணைந்து அந்த யானைக்கு தேவையான சிகிச்சையை வழங்கியுள்ளனர்.