விபத்தில் காதலி கண்ணெதிரே பலியான காதலன் !!


கடவத்தை – அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு முன்னால் உள்ள சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சந்தியில் வீதி சமிக்ஞையை கவனிக்காது பயணித்த சிற்றூர்தியொன்று முச்சக்கரவண்டியில் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த கிரிபத்கொட பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்ததோடு அவரின் காதலியும் சகோதரரும் படுகாயமடைந்து ராகமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து, வாகனம் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த கெமராவில் பதிவாகியுள்ளது