துப்பாக்கி வெடித்து சிதறியதில் முகம் சிதைந்து பறிபோனது இளைஞனின் உயிர் !


முல்லைத்தீவு – முள்ளியவளை பிரதேசத்தில் வனப்பகுதியொன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு மீட்கப்பட்டுள்ள இந்த சடலம், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நபரொருவரின் சடலம் என தெரியவந்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்துள்ளவர் முள்ளியவளை 01 ஆம் வட்டாரத்தினை சேர்ந்த 22 வயதான இளைஞர் என முல்லைத்தீவு காவல்துறை தெரிவித்துள்ளது.

பிரதேசவாசிகள் வழங்கிய தகவலுக்கு அமைய குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவரின் தலைப்பகுதியில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் எப்படி இடம்பெற்றது என காவல்துறை விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், மிருக வேட்டைக்காக துப்பாக்கியினை பயன்படுத்திய போது துப்பாக்கி வெடித்து சிதறியதில் குறித்த இளைஞனின் முகப்பகுதி மற்றும் தலைப்பகுதியில் காயம் ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது.

சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை முல்லைத்தீவு மருத்துவமனையில் இடம்பெறவுள்ளதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறை மேற்கொண்டு வருகிறது..