விபத்தில் காதலன் உயிரிழந்தது தெரியாமல் கடிதம் எழுதிய காதலி


கடவத்தை பகுதியில் அதிவேக நெடுஞ்சாலைக்கு பிரவேசிக்கும் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் தனது காதலன் உயிரிழந்தமையை அறிந்திராத காதலி காதலனுக்கு எழுதிய கடிதம் இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த பகுதியில் முச்சக்கர வண்டி செல்வதற்கான பச்சை நிற வெளிச்சம் ஒளிர்ந்த வேளையில் முச்சக்கர வண்டி மெதுவாக நகர்கின்றது.

இந்நிலையில் எதிர்திசையிலிருந்து வேகமாக வருகை தந்த மகிழூர்தி ஒன்று முச்சக்கர வண்டியுடன் மோதுண்டமையினால் முச்சக்கர வண்டி சக்கரம் போன்று சுழன்று குடைசாய்ந்தது.

முச்சக்கரவண்டியில் காதலன் காதலனின் காதலி, காதலியின் தம்பி ஆகியோர் பயணித்துள்ளனர்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நால்வரும் (சாரதி உட்பட) சிகிச்சை பெற்று வந்த நிலையில், காதலன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தினை அறிந்திராத காதலி, ' உங்களை பார்த்து மூன்று தினங்கள் கடந்த விட்டது. எனது அம்மா உள்ளிட்ட அனைவரும் உங்களை காண விரும்புகின்றனர்' என கடிதம் ஒன்றை எழுதி அனுப்பி வைத்துள்ளார்.

ஆனால் அவருக்கு தனது காதலன் இறந்து விட்ட செய்தி இதுவரைக்கும் தெரியாது.

சாரதியின் கவனமின்மையினால் இவ்வாறான ஒரு நல்ல உறவினை இழக்க நேரிட்டதாகவும், குறித்த சாரதியை பல கெட்டவார்த்தைகளாலும் நிந்தித்து முகப்புத்தகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.