ஆரையம்பதி விஸ்வகலா விளையாட்டு கழகத்தின் 2018 ம் ஆண்டுக்கான 5வது பிறீமியர்லீக் சுற்றுப்போட்டியின் இறுதிநாளான 24.06.2018 ஆரையம்பதியின் புகழ்பூத்த மூத்த கலைஞரும், கவிஞரும், ஆரையம்பதி மண்ணிற்கு பெருமை சேர்க்க பல வகையிலும் பாடுபட்டு உழைத்த ஐயா மு. கணபதிப்பிள்ளை (மு.க ஐயா) அவர்களுக்கு இளம் சமூதயத்தின் தூண்களாகத் திகழும் விஸ்வகலா விளையாட்டுக்கழக வீரர்களால் பொண்னாடை போர்த்தி, நினைவுச் சின்னம் வழங்கி வைக்கும் நிகழ்வினை மிகவும் சிறப்பான முறையிலே நடாத்தியிருந்தனர்.
இதன் போது கருத்து தெரிவித்த ஐயா அவர்கள் 'இளைஞர் சமுதாயம் எமது ஆரையம்பதி மண்னை திறம்பட கட்டிக் காக்கவேண்டும், பெரியவர்களை மதித்து அவர்களை கௌரவிக்கின்ற மனப்பாங்கினை கொண்ட இந்த இளைஞர் குழாமினை வாழ்த்துவதாகவும் கூறியிருந்தார்'.