கோட்டைமுனை யூசூபியா பள்ளிவாயில் இன நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு


(சிவம்)

இன நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை (03) கோட்டைமுனை யூசூபியா பள்ளிவாயில் நடைபெற்றது.

மஸ்ஜிதுல் யூசூபியா பள்ளிவாயில் நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வு பள்ளியின் பிரதம இமாம் இலியாஸ் மௌலவி அவர்கள் நோன்பின் மகத்துவத்தினை விளக்கினார்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர சபையின் அரசடி 10 ஆம் வட்டார உறுப்பினர் சிவம் பாக்கியநாதன், மட்டக்களப்பு பிரதம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சி.ஐ. திகாவத்துர, அரசடிப் பிளளையார் ஆலயத் தலைவர் எஸ்.அமிர்தலிங்கம், கலாபூசணம் கவிஞர் அரங்கம் இரா தவராஜா மற்றும் வை.எம்.ஏ.சி. விளையாட்டுக் கழகத்தின் தலைவர் இ. வைரமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

வர்த்தகர்கள், பிரதேச பிரமுவர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.