கதிர்காமத்தில் துப்பாக்கி சூடு! பூசகரால் சுடப்பட்ட தேரர்!


கதிர்காமம் கிரிவேஹெர ரஜமகா விகாரையின் தலைமை விகாராதிபதி கொபவக தம்மிந்த தேரர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செவ்வாய்க்கிழமை அன்று (12)  மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவத்தின் பிரதான சந்தேக நபர், மாஹாசேன் விகாரையின் முன்னாள் பிரதான பூசகரான அசேல பண்டார என காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தற்போது அவர் தலைமறைவாகியுள்ளதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய ஹம்பாந்தோட்டை பொது மருத்துவமனையில் இருந்து வானூர்தி மூலம் கொழும்புக்கு அழைத்து வரப்பட்ட குறித்த விகாரதிபதி, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான அவர் ஹம்பாந்தோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதன்போது அவர் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாக அந்த மருத்துவமனையின் பணிப்பாளர் டனுஷ்க பெரேரா தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.