இன்று பிற்பகல் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
17 அடுக்கு மாடிகளை கொண்டு நிர்மாணிக்கப்பட்டு வரும் இந்த குடியிருப்பின் 14 ஆவது மாடியில் இருந்து அவர்கள் கீழே விழுந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
பதுளை பகுதியை சேர்ந்த 45 வயதான நபரும், பிபிலை பகுதியை சேர்ந்த 39 வயதான நபருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெஹிவளை காவல்துறை மேற்கொண்டு வருகிறது.