குறித்த பெண்ணின் கணவன் வேலைக்கு சென்றிருந்த நிலையில், இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தாயின் வயது 33 எனவும், பிள்ளைகளின் வயது 12, 5 மற்றும் 2 எனவும் காவற்துறையினர் குறிப்பிட்டனர்.
மருத்துவமனையில் அவர்களுக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்ற நிலையில், அவர்கள் விஷம் அருந்தியமைக்கான காரணம் கண்டறியப்படவில்லை என காவற்துறையினர் தெரிவித்தனர்.