கணவன் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து விஷம் அருந்திய மனைவியும், மூன்று பிள்ளைகளும்.!!


வவுனியா – செட்டிக்குளம் - மெனிக்பாம் பிரதேசத்தில் தாய் மற்றும் அவரது 3 பிள்ளைகளும் விஷம் அருந்திய நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பெண்ணின் கணவன் வேலைக்கு சென்றிருந்த நிலையில், இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தாயின் வயது 33 எனவும், பிள்ளைகளின் வயது 12, 5 மற்றும் 2 எனவும் காவற்துறையினர் குறிப்பிட்டனர்.

மருத்துவமனையில் அவர்களுக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்ற நிலையில், அவர்கள் விஷம் அருந்தியமைக்கான காரணம் கண்டறியப்படவில்லை என காவற்துறையினர் தெரிவித்தனர்.