பழம் பறிக்க சென்ற பல்கலைக்கழக மாணவன் பலியான பரிதாபம் !


களனி பல்கலைக்கழக மாணவரொருவர் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.

பல்கலைக்கழக வளாகத்தில் இரும்பு கம்பியின் உதவியுடன் பழங்கள் பறிக்க முற்பட்ட வேளையில் இவ்வாறு மின்சாரம் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதனை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மூன்றாம் ஆண்டில் கல்வி பயிலும் 23 வயதுடைய மாணவரொருவரே இவ்வாறு உயிரழந்துள்ளார்.