குடும்பஸ்தர் ஒருவரால் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து சிறுமி பாலியல் பலாத்காரம் !


திருகோணமலை மாவட்டத்தில் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பதின் மூன்று வயதுடைய சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய குடும்பஸ்தர் ஒருவரை வெள்ளிக்கிழமை(29) மாலை கைது செய்துள்ளதாக சூரியபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஒன்பதாம் கட்டை,சூரியபுர பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபர் திருமணம் முடித்து மூன்று பிள்ளைகள் உள்ள நிலையில் மனைவி வெளிநாடு சென்றுள்ளதால் அயல் வீட்டிலுள்ள பதின் மூன்று வயதுடைய சிறுமியொருவரை சிறுமியின் பெற்றோர் இல்லாத சந்தர்ப்பத்தில் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியதாக சிறுமி பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து சிறுமியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

சந்தேகநபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேகநபரை தடுத்து வைத்துள்ளதோடு,சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபரை கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் பொலிஸார் ஆஜர்படுத்த உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.