காத்தான்குடி துப்பாக்கி சூடு! குற்றவாளிகள் கொக்கட்டிச்சோலையில் மறைந்திருந்த நிலையில் கைது!


மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியொன்றில் கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் இன்று காலை சம்பவத்துடன் தொடர்புடைய மூவரை கைதுசெய்துள்ளனர்.

சந்தேக நபர்கள் கொக்கட்டிச்சோலை பகுதியில் தலைமறைவாகியிருப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலுக்கிணங்க, குறித்த பகுதிக்கு சென்ற பொலிஸார் இவர்கள் மூவரையும் கைதுசெய்துள்ளதுடன் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றியுள்ளனர்.

அத்துடன் கைது செய்யப்பட்ட இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.