காந்திப் பூங்காவில் நடைபெற்ற மாதாந்த பௌர்ணமி கலை விழா


(சிவம்)

மட்டக்களப்பு மக்களின் பாரம்பரிய கலை கலாசாரங்களை வெளிப்படுத்தும் ஆற்றுகை மாதாந்த பௌர்ணமி கலை விழா காந்திப் பூங்காவில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டச் செயலகம், மண்முனை வடக்கு பிரதேச செயலகம் மற்றும் மட்டக்களப்பு மாநகர சபை என்பன இணைந்து நடாத்திய இந்நிகழவில் கலைஞரும் பாடகருமான ஞானப்பிரகாசம் மட்டக்களப்பு விவசாயிகளின் தொழிலுடன் இணைந்த பாடல்களைப் பாடி சபையினரை மகிழ்வித்தார்.

மட்டக்களப்பில் மருவி வரும் பறங்கிய இனத்தவரின் பாரம்பரிய கலாசார நிகழ்வான கபறிஞ்சா நடனம் மேடையை அங்கரித்தது.

இந்நிகழ்வில் மாநகர முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் கே. சத்தியசீலன், மாநகரசபையின் உறுப்பினர்கள், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதர்சினி, உதவி அரசாங்க அதிபர் எஸ். நவேஸ்வரன், மாநகர ஆணையாளர் என்.மணிவண்ணன், பிரதி ஆணையாளர் என்.தனஞ்செயன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.