வட்டுக்கோட்டையிலுள்ள தனியார் கல்வி நிலையத்தில் கற்பிக்கும் ஆசிரியர், அவரிடம் கற்கச் செல்லும் பதின்ம வயது மாணவிகளளை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்துவதாக குற்றச்சாட்டுக்கள் வெளியானது.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் 3 மாணவிகள் அவருக்கு எதிராக வாக்குமூலம் வழங்கியதை அடுத்து மேற்கொண்டுவந்த விசாரணையின் பின்னர் ஆசிரியர் (புதன்கிழமை) கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் அவரை மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த ஆசிரியரை பாடசாலையிலிருந்து நீக்குமாறு பாடசாலை நிர்வாகத்துக்கு பழைய மாணவர் சங்கமும் பெற்றோரும் கடும் அழுத்தங்களை வழங்கினர்.
இந்த நிலையில் ஆசிரியர் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளின் முன்னகர்வுகள் தொடர்பில் பொலிஸார், பாடசாலை அதிபருக்கு அறிவித்திருந்தனர்.
அதனையடுத்து ஆசிரியரை பாடசாலையிலிருந்து இடைநிறுத்துவதாக பாடசாலை அதிபர் உத்தியோகபூர்வமாக அறிவித்தல் விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.