புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் மக்கள் சந்திப்பும், கலந்துரையாடலும்



புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் பலிகள் கட்சி வடக்கு கிழக்கு பகுதிகளில் பல்வேறு இடங்களில் மக்கள் சந்திப்புகள், கலந்துரையாடல்கள் மற்றும் கட்சிக் கொள்கை தொடர்பான விளக்கவுரைகள் என்பவற்றை மேற்கொண்டு வருகின்றது. இன்று (30) புதுமண்டபத்தடியில் கட்சியின் கொள்கை விளக்கக் கலந்துரையாடல் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா தலைமையில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் ஆலோசகருமான பி.ஜோன்சன், ஆலோசகர் செ.புவனேந்திரன், மட்டக்களப்பு மாவட்ட ஊடகப் பேச்சாளர் எம்.புவிதரன், வடக்கு கிழக்கு அரசியல் ஒருங்கிணைப்பாளர் எம்.பரணிதரன், கட்சியின் வவுணதீவுப் பிரதேச ஒருங்கிணைப்பாளர் என்.ஜினேஸ் மற்றும் கட்சி உறுப்பினர்கள், மாவீரர் குடும்ப உறவுகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது கட்சி ஆரம்பித்ததன் நோக்கம், அதன் கொள்கை விளக்கங்கள் தொடர்பில் பிரதேச மக்களுக்கு தெளிவுபடுத்தியதுடன், சுவிஸ் நாட்டில் வசிக்கும் மகிழூரைச் சேர்ந்த மார்க்கண்டு தேவதாஸ் அவர்களினால் வறுமைப்பட்ட மக்களின் பிள்ளைகளின் நலனுக்காக அவரின் தந்தையாரின் நினைவாக மாதாந்தம் 10 சிறுவர்களுக்கு சேமிப்புக் கணக்கு ஆரம்பிக்கும் செயற்பாடும் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலவிகள் கட்சியினரால் செயற்படுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.