இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கொழும்பில் இருந்து மட்டக்களப்புவழியாக திருக்கோவில் நோக்கி பயணித்த தனியார் பேருந்து மீது பின்னால் வந்த மேலும் ஒரு தனியார் பேருந்து மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காயமடைந்துள்ளவர்களில் இரண்டு பெண்கள் உள்ளடங்கியுள்ளதோடு, கவலைக்கிடமான 4 பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக ஹபரண மருத்துவமனையில் இருந்து தம்புள்ளை மற்றும் பொலன்னறுவை மருத்துவமனைகளுக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளனர்.