மட்டக்களப்பு கோரளைப்பற்றில் வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு


மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று - கண்ணகிபுரத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள முல்லைநகர் வீட்டுத்திட்டத்தின் கீழான வீடுகள் அதன் பயனாளிகளிடம் இன்று கையளிக்கப்படவுள்ளது.

வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையில் இது தொடர்பான நிகழ்வு இடம்பெறவுள்ளது.

இத்திட்டத்தில் 25 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. கிராம எழுச்சி வேலைத்தி;;ட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் கையளிக்கப்பட உள்ள 75வது எழுச்சிக் கிராமம் இதுவாகும். 

இதற்கு ஒரு கோடி 90 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது. மின்சாரம், குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளைக் கொண்டதாக இது அமைக்கப்பட்டு;ள்ளது. இந்த நிகழ்வின் போது குறைந்த வருமானத்தைக் கொண்ட குடும்பங்களுக்காக 3 கோடி ரூபா பெறுமதியான 'விசிறி' 'சொந்துறு கடனுதவியும் வழங்கப்டவுள்ள