துறைநீலாவணை முத்துமாரியம்மன் ஆலயத்தின் சமுத்திர நீராடல் நிகழ்வு இன்று மாலை இடம்பெற்றது.



(சா.நடனசபேசன்)

கிழக்கிலங்கையின் வரலாற்றுச்சிறப்பு மிக்க  மட்டக்களப்பு துறைநீலாவணை முத்துமாரியம்மன் ஆலய  திருச்சடங்கின்; சமுத்திர நீராடல் நிகழ்வு 28 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை இடம்பெற்றது.

ஆலயத் திருச்சடங்கு கடந்த 23.06.2018 ஆம் திகதி சனிக்கிழமை மாலை திருக்கதவு திறக்கப்பட்டு ஆரம்பமானது 25,26 ஆம் திகதிகளில் அம்மன் ஊர்வலம்  இடம் பெற்றதுடன் 27 ஆம்திகதி புதன்கிழமை கன்னிக்கால் வெட்டும் நிகழ்வு இடம்பெற்றதுடன். இன்று மாலை பெரியநீலாவணை சமுத்திரத்தில் நீராடப்பட்டது.

நாளை வெள்ளிக்கிழமை 29 ஆம் திகதி  காலை தீமிதிப்பு வைபவம் இடம் பெற இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.