கை துண்டமான பல்கலைக்கழக மாணவனின் கையை மீள இணைக்க முடியாத சோக நிலை!


இரத்தினபுரி பெல்மடுல்லயில் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த போது, பாராவூர்தியில் மோதி கை துண்டித்த பல்கலைக்கழக மாணவனின் கையை உடலுடன் மீள இணைக்க முடியாதென கொழும்பு தேசிய மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மருத்துவமனையின் பிரதிப் பணிப்பாளர் மருத்துவ நிபுணர் சமிந்தி சமரகோன் இதனை தெரிவித்துள்ளார்.

பேருந்தில் பயணித்த குறித்த மாணவன் தனது வலதுகையை பேருந்தின் ஜன்னலுக்கு வெளியில் வைத்துச் சென்றதினால் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

மாணவனின் துண்டமான கையுடன் பதுளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இதனையாடுத்து, கையை உடலில் இணைப்பதற்கு விசேட சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்ட போதும் சிகிச்சை பலனளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.