தெரிவானார் பாராளுமன்ற புதிய பிரதிச் சபாநாயகர்


பிரதி சபாநாயகராக ஆனந்த குமாரசிறி தெரிவு

இலங்கை நாடாளுமன்றின் புதிய பிரதி சபாநாயகராக நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த குமாரசிறி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று மாலை இடம்பெற்ற பிரதி சபாநாயகர் தெரிவிற்கான இரகசிய வாக்கெடுப்பில் 97 வாக்குகளை பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த குமாரசிறி புதிய பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவருக்கு எதிராக போட்டியிட்ட சுதர்ஷனி பிரனாந்து பிள்ளைக்கு 53 வாக்குகள் கிடைக்கப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.