கல்லடி விவேகானந்தா மகளீர் கல்லூரி மாணவர்கள் மேற்கொண்ட கல்விச்சுற்றுலா

(க.விஜயரெத்தினம்)
கல்லடி விவேகானந்தா மகளீர் கல்லூரி உயர்தர மாணவர்கள் கற்றலை சிறப்பூட்டும் வகையிலும்,புறக்கிருத்திய அனுபவ விடயங்களை தெரிந்து கொள்ளும் வகையில் மூன்றுநாள் சுற்றுலாவை மேற்கொண்டார்கள்.கல்லடி விவேகானந்தா மகளீர் கல்லூரியின் முதல்வர் திருமதி. திலகவதி ஹரிதாஸ் தலைமையில் க.பொ.த.உயர்ததரத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் இந்த கல்விச்சுற்றுலாவில் இணைந்திருந்தார்கள்.
அம்பாறை,அம்பாந்தோட்டை,காலி,மாத்தறை,கொழும்பு போன்ற மாவட்டங்களில் உள்ள சீனித்தொழிற்சாலை,ஆலய வழிபாடு,தொங்குபாலம்,உலர் மின் உற்பத்தி நிலையம்,பாராளுமன்றம்,மத்திய வங்கி,கோட்டை,யாலப்பூங்கா,உட்பட பல இடங்களை தரிசித்து மாணவர்களுக்குரிய மேலதி கல்வி சார்ந்த விடயங்களை சுற்றுலாவில் பெற்றுக் கொண்டார்கள்.கல்விச் சுற்றுலாவில் பிரதி அதிபர் வீ.அமிர்தலிங்கம்,ஆசிரியர்களான திருமதி. நித்தி சிவநாதன்,பீ.மலர்வண்ணன்,மற்றும் திரு.ஹரிதாஸ்,பெற்றோர்கள் இணைந்திருந்தார்கள்.