அக்கரைப்பற்றில் ஸ்ரீ சரவணபவ கபே சைவ உணவகம் திறந்துவைப்பு


(சா.நடனசபேசன்)
அக்கரைப்பற்றில் ஸ்ரீ சரவணபவ கபே சைவ உணவகம் திறந்துவைக்கும் நிகழ்வு 25 ஆம் திகதி திங்கட்கிழமை காலை சோ.கருணாகரம் (கண்ணன்) தலைமையில் இடம்பெற்றது.
அக்கரைப்பற்று சாகாம வீதியில் அமைந்துள்ள உயர் தர இச் சைவ உணவகத்தினை சுவிஸ் உதயத்தின் பொருளாளர் சமூகசேவகர் க.துரைநாயகம் அவர்களது  கரங்களால் திறந்து வைக்கப்பட்டது.
  இந்நிகழ்வில் தமிழ் முஸ்லிம் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டு இருந்தனர்.
 இவ் உணவகத்தின் கிளைகள் மட்டக்களப்பு கல்முனை ஆகிய இடங்களில் இதற்கு முன்னர் இயங்கிவருவதுடன் விரைவில் வாழைச்சேனை மற்றும் அம்பாரை நகரில் புதிய கிளைகள் திறந்துவைக்கப்பட இருப்பதாக க.துரைநாயகம் தெரிவித்தார்.