தாழங்குடா கிராமத்தில் நடைபெற்ற இரத்ததான நிகழ்வு



இலங்கை செஞ்சிலுவைச் சங்க மட்டக்களப்பு கிளையின் ஏற்பாட்டில்  தாழங்குடா கிராமத்தில் இரத்ததான முகாம் வெள்ளிக்கிழமை 2018.06.29  தாழங்குடா சனசமூகநிலைய கட்டிடத்தில் நடைபெற்றது.

இலங்கை செஞ்சிலுவைச் சங்க மட்டக்களப்பு பிராந்தியத்தின் செயலாளர் சா.மதிசுதன் அவர்களது வழிகாட்டலின் கீழ் நடைபெற்ற இந் இரத்த தான முகாமில் தாழங்குடா கிராமத்தை சேர்ந்த இளைஞர், யுவதிகள் பலர் (26 பேர்) கலந்து கொண்டனர்.

தாழங்குடா கிராம இளைஞர்கள் ஒன்றாக இணைந்து முதலாவதாக செயற்படுத்திய இவ் இரத்த தான முகாமில் மண்முனை கிராம சேவை உத்தியோகத்தர் மற்றும் மட்/ தாழங்குடா ஸ்ரீ விநாயகர் வித்தியாலய ஆசிரியர்கள்  ஆகியோரும் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும்.