மட்டக்களப்பு மாவட்டத்தில் தடாக மீன் வளர்ப்பினை ஊக்குவிப்பதற்காக கருத்தரங்கு


மட்டக்களப்பு மாவட்டத்தில் தடாக மீன் வளர்ப்பினை ஊக்குவிக்கும் நோக்குடன் கிழக்கு மாகாண மீன்பிடி பிரிவினால் 18-06-2018 அன்று  Humanity & Inclusion  நிறுவனத்தின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மாவட்ட மீன்பிடி அபிவிருத்தி உத்தியோகத்தர் க.கேதாகரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலுடனும் கல்லடி Green Garden Hotel இல் நடைபெற்றது.

இந் நிகழ்வில் கிழக்கு மாகாண மீன்பிடி பணிப்பாளர் திரு  சி.சுதாகரன்  அதிதியாக கலந்து கொண்டதுடன் பயிற்சி வகுப்புக்கு வளவாளராகவும் கலந்து கொண்டார்.

இந்த தடாக மீன் வளர்ப்பு தொடர்பான பயிற்சி வகுப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த 40 பயனாளிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.