தாழங்குடா பகுதியில் பொலிசாரின் தேடுதல் நடவடிக்கையில் பிடிபட்ட மாணவர்கள் !


மட்டக்களப்பு – தாழங்குடா, வேடர்குடியிருப்பு பகுதியில் பாடசாலைக்கு சமூகமளிக்காத 20 மாணவர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலைக்கு சமூகமளிக்காத மாணவர்கள் தொடர்பில் தாழங்குடா நடமாடும் பொலிஸ் பொறுப்பதிகாரி ஜே.எம்.மதுசங்க தலைமைமையிலான பொலிஸார் ஆரையம்பதி பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளுடன் இணைந்து வீடு வீடாக தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது பாடசாலைக்குச் சமூகமளிக்காது வீடுகளில் முடங்கியிருந்த 20 மாணவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களது பெற்றோரும் அறிவுறுத்தப்பட்டனர்.

மேலும் மாணவர்களது பாடசாலை புத்தகங்கள் அப்பியாசக் கொப்பிகளும் பரிசோதிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து குறித்த மாணவர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பாடசாலைக்கு சமுகமளிக்காவிட்டால் பெற்றோர்கள் மீது சட்டநடவடிக்கை முன்னெடுக்கப்படுமென பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.