வெளிநாடு செல்வோருக்கான முக்கிய அறிவித்தல்! விமான சேவையில் மாற்றம்!


இந்து சமுத்திர வான் பரப்பில் மேற்கொள்ளப்படும் பரீட்சார்த்த விமானப் பயணத்தின் காரணமாக நாளைய தினம் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வெளியேறும் மற்றும் தரையிறங்கும் விமான சேவைகளில் மாற்றம் ஏற்படுவதாக ஸ்ரீ லங்கன் விமான சேவை தெரிவித்துள்ளது.

இது குறித்து மேலதிக தகவல்களை அறிந்துகொள்வதற்காக தமது சுற்றுலா பிரதிநிதியையோ அல்லது 1979 என்ற உடனடி அழைப்பு இலக்கத்தின் ஊடாக ஸ்ரீ லங்கன் விமான சேவையை தொடர்புகொள்ள முடியும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நாளை அதிகாலை வேளையில், கோலாலம்பூர், சிங்கப்பூர் மற்றும் பேங்கொக் முதலான இடங்களுக்கு பயணிக்கும், அங்கிருந்து இலங்கை வரும் விமான பயணங்களுக்கு இந்த நிலைமை நடைமுறையில் இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.