மாநகர சபையின் வினைத்திறன்மிகு செயற்பாட்டை அதிகரித்தல் தொடர்பில் கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாநகரசபை முதல்வரின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனையின் பிரகாரம் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்கள் மற்றும் மாநகரசபை உத்தியோகத்தர்கள், ஊழியர்களுக்கிடையில் மாநகரசபையின் வினைத்திறன் மிக்க செயற்பாட்டை அதிகரித்தல் தொடர்பிலான கலந்துரையாடல் நிகழ்வு இன்று (07) மாநகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் மாநகர முதல்வர் தி.சரவணபவான், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகரசபை உறுப்பினர்கள், மாநகரசபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு மாநகர முதண்மை மாநகராக்கும் செயற்திட்டத்திற்கான வினைத்திறன் மிக்க செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், மாநகர உறுப்பினர்கள், ஊழியர்களினால் ஆக்கபூர்வமான பல கருத்துக்கள் இங்கு தெரிவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.