காரைதீவில் மோகன்-கணேஸ் ஞாபகார்த்த மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி

காரைதீவு றிமைண்டர் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் அமரர் மோகன்-கணேஸ் ஞாபகார்த்தமாக நடாத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி   செவ்வாய்க்கிழமை  மாலை காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் மிகவும் சிறப்பாக இ டம் பெற்றது.

இச் சுற்றுப் போட்டியில் காரைதீவு கல்முனை சம்மாந்துறை பிரதேசங்களைச்
சேர்ந்த 16  விளையாட்டுக் கழகங்ள் பங்கு பற்றி  இறுதி சுற்றுப்
போட்டியில் காரைதீவு பலம்பெரும் கழகமான விவேகானந்தா  விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து காரைதீவு கிற்(HIT) விளையாட்டுக் கழகம் மோதி இறுதியாக காரைதீவு கீற் விளையாட்டுக் கழகம் வெற்றிபெற்றது.


10 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட போட்டியில் காரைதீவு விவேகானந்தா
விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து காரைதீவு கிட் அணி மோதியிருந்தது
ஆரம்பத்தில்  துடுப்பெடுத்தாடிய   'கிட்' அணியினர் 10 ஓவர்கள் நிறைவில்
6விக்கெட்டுக்களை , இ ழந்து  99 ஓட்டங்களை பெற்று 100 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய வி.எஸ்.சி அணியினர் 10 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இ ழந்து  88 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 12ஓட்டங்களால் தோல்வியைத்தழுவிக் கொண்டனர்.
இ ப் போட்டியின் சிறப்பாட்டக்காரராக கிட் அணியின் சகலதுறை வீரர்  கவிதாஸ் தெரிவு செய்யப்பட்டார்.

விறுவிறுப்பாக இ டம் பெற்ற இ ச் சுற்றுப் போட்டிக்கு பிரதம அதிதியாக
இணைந்த வடகிழக்கின் முதலாவது முதலமைச்சர் அண்ணாமலை வரதராஜ பெருமாள் கிழக்குமாகாண சபை முன்னாள் உறுப்பினர்  இ ரா.துரைரெட்ணம் காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் செ. இ ராசையா காரைதீவு பிரதேச சபையின் உறுப்பினர் ச.நேசராஜா காரைதீவு விளையாட்டுக் கழகத்தின் முன்னாள் தலைவர்  TRACKS அமைப்பின் முக்கியஸ்தருமான  ச.நந்தகுமார்  காரைதீவு விவேகானந்தா விளையர்டுக்கழகத் தலைவர் வினோதராஜா எஸ்.சீறிதரன்(உதவிக் கல்வி பணிப்பாளர்
திருக்கோயில் கல்வி வலயம்) வவுணதீவு பிரதேச சபை உறுப்பினர் குகன்
குடும்பத்தினர் திருகோணமலை நகரசபை உறுப்பினர் சிவகுமார் மோகன் கணேஸ் குடும்ப உறவுகள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்

இப் போட்டிக்கு பிரதம அதிதியாகக்கலந்துகொண்ட  வடக்கு கிழக்கு இணைந்த முன்னாள் முதலமைச்சர்  வரதராஜப்பெருமாள் வெற்றிபெற்ற ஹிற் அணியினருக்கு வெற்றிக்கிண்ணத்தை வழங்கிவைத்தார்.