பட்டிருப்பு வுளுடயமன்ட் விளையாட்டுக் கழகத்தின் 32வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் விளையாட்டு விழா

( சிவகுமார் , சசி )

பட்டிருப்பு வுளுடயமன்ட் விளையாட்டுக் கழகத்தின் 32வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மாபெரும் விளையாட்டு விழா சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது . இதைத் தொடர்ந்து இன்று இரவு இன்னிசை நிகழ்சி ஒன்றும் இடம்பெறவுள்ளது .

நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா. உதயகுமார்  கலந்துகொண்டார்

இந்த விழாவில் துவிச்சக்கரவண்டி ஓட்டப்போட்டி , மரதன் ஓட்டப்போட்டி , தலையணைச்சண்டை , பானை உடைத்தல் , வழுக்குமரம் ஏறல் மற்றும் பட்டிருப்பு வாவியில் தோணி ஓட்டம் போன்ற விளையாட்டுக்கள் இடம்பெற்றது.


இந்த நிகழ்வில்  மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர். நெடுஞ்செழியன் ,  களுவாஞ்சிக்குடி   பொலிஸ் பொறுப்பதிகாரி   , வலய  கல்விப் பணிப்பாளர் சுகிர்தராஜன் மற்றும்   வி.ரஞ்சிதமூர்த்தி  , உள்ளிட்ட பிரதேச மக்கள் கலந்துகொண்டனர்.