எதிர்வரும் மாகாண சபை தேர்தல் விருப்பத்தெரிவு வாக்களிப்பு முறைக்கமைய நடைபெறும்

எதிர்வரும் மாகாணசபைத் தேர்தல் விருப்பத்தெரிவு வாக்களிப்பு முறைக்கமைய நடைபெறும் என்று சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

இதற்குரிய திருத்தப் பிரேரணை செப்டெம்பர் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. டிசம்பர் மாதம் அளவில் தேர்தலை நடத்தக்கூடியதாக இருக்குமென அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

நேற்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே இந்த கருத்தை அமைச்சர் வெளியிட்டார்.