சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர் தற்கொலை


கம்பளை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 23 வயதான இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

கடந்த தினம் புஸ்ஸெல்லாவ பகுதியில் வைத்து ஹெரோயின் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்ததாக தெரிவித்து அவர் கைது செய்யப்பட்டார்.

அவர் பல்லேக்கலை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்னதாக, கம்பளை சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இதன்போது அவர் தமது ஆடைகளைப் பயன்படுத்தி தற்கொலை செய்துக் கொண்டார் என்று காவற்துறையினர் தெரிவித்ததாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

அவரது பிரேதப் பரிசோதனை கம்பலை வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படுவதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.