திருட்டு மின்சாரம் பெற்றவர்களுக்கு நேர்ந்த கதி !


திருகோணமலை மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் திருட்டு மின்சாரம் பெற்ற மூவரை நேற்றிரவு (15) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மீற்றர்களில் மின்சாரம் குறைவாக செல்வதற்கு வசதியாக திருட்டு நடவடிக்கைகளை மேற்கொண்ட இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கிண்ணியா, இடிமன் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரையும், கிண்ணியா, கற்குழி பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய ஒருவரையும் கைது செய்துள்ளதாகவும்,பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதேபோன்று உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் திருட்டு மின்சாரம் பெற்ற ஒருவரையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். திருகோணமலை, மட்டிக்களி, பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மின் வாசிப்பாளர்களினால் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய பொலிஸாரும், மின் பொறியியல் அதிகாரிகளும் மேற்கொண்ட திடிர் சுற்றிவளைப்புகளின் அடிப்படையில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்களை தடுத்து வைத்துள்ளதோடு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.