இலங்கை இளம் தம்பதியினர் இந்தியாவில் செய்த மோசமான செயல் !


கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக பாரிய திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இலங்கைத் தம்பதியினரை இந்திய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவர்கள் இலங்கைக்கு தப்பிச்செல்ல தயாராக இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

திருவரம்பூர் - துவாக்குடியை அடுத்து உள்ள வாழவந்தான் கோட்டையில் வசிக்கும் அகதிகள் முகாமில் வட்டி தொழில் செய்து வரும் இலங்கை அகதியான தேவகுமாரியிடம், 3 பேர் கத்தியை காட்டி 10 பவுன் நகைகளை மிரட்டி வாங்கி சென்றுள்ளனர்.

இதில் சந்தேகத்தின் பெயரில் அகதிகள் முகாமில் உள்ள சிவகுரு, விக்னேஷ் ஆகியோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவத்தின் பின் இவர்களின் நண்பனான நாமக்கல் அகதிகள் முகாமை சேர்ந்த ராஜா என்கிற “கெட்டியான் பாண்டி” அவனது மனைவியுடன் தலைமறைவாகி உள்ளார்.

இவர்கள் தலைமறைவாகி உள்ள விடயம் பொலிஸாருக்கு தெரியவந்த நிலையில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது, கடந்த 2 மாதங்களாக பூட்டிய வீடுகளில் நகைகளை திருடுவது அதிகரித்து வந்துள்ளது. இளம் வயது கணவன் மனைவியாக இரண்டு பேர் திருட்டு நடந்த இடங்களில் எல்லாம் வீடு வாடகைக்கு கேட்டு வந்திருப்பது தெரியவந்தது.

அப்படி வீடு வாடகைக்கு கேட்டு தெருக்களில் சுற்றும்போது பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு பட்டபகலில் அந்த வீடுகளில் தங்கள் கைவரிசைகளை காட்டியிருக்கிறார் என்பதை விசாரணையில் தெரிந்து கொண்டனர்.

இந்த நிலையில் இந்த தம்பதியினர் குறித்து அனைத்து பொலிஸ் நிலையத்திற்கும் தெரியப்படுத்தி வைத்திருந்த நிலையில், இவர்கள் இலங்கைக்கு தப்பி செல்வதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்த நிலையில் தனிப்படை பொலிஸாரால் என்.ஐ.டி அருகே கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.