விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு

[மயூ.ஆமலை]
நேற்றைய தினம் திங்கட்கிழமை மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசத்திலுள்ள நாவற்காடு பாரத் விளையாட்டுக் கழகத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன்அவர்களின் பண்முகப்படுத்தப்பட்ட நிதியில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

அத்தோடு நேற்றைய தினம் எதிர்வரும் 14ம் திகதி நடைபெறவிருக்கின்ற மாபெரும் உதைப்பந்தாட்ட போட்டியை நடாத்துவதற்கு நாவற்காடு மைதானமும் நாவற்காடு மக்களால் சீர் செய்யப்பட்டது. இது பகலிரவு மின்னொளி உதைப்பந்தாட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது.