மட்டக்களப்பில் இலஞ்சம் பெற்ற பொலிஸ் நிர்வாக பிரிவின் பொறுப்பதிகாரி பிடிபட்டார் !!


மட்டக்களப்பு கல்குடா காவற்துறை நிர்வாக பிரிவின் பொறுப்பதிகாரி கையூட்டல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வர்த்தகரொருவரிடம் மூன்று இலட்சம் ரூபாய் கையூட்டல் பெற்ற சந்தர்ப்பத்தில் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

வெயங்கொடையை சேர்ந்த வர்த்தகரொருவர் கல்குடா பிரதேசத்தில் ஆரம்பிக்கவுள்ள செங்கல் வெட்டும் வியாபாரத்திற்கான உரிமத்தை பெற்றுக்கொள்வதற்காக காவற்துறையிடம் பெறவேண்டிய அறிக்கைக்காக 5 இலட்சம் ரூபாய் கையூட்டலாக கோரப்பட்டுள்ளது.

குறித்த தொகையில் மூன்று இலட்சம் ரூபாவினை வாழைச்சேனை கோரளைபற்று பிரதேச சபையினுள் பெற்றுக்கொண்ட சந்தர்ப்பத்திலேயே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் நிலையில் , காவற்துறை அதிகாரி வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.