ஆசிரிய கல்வியியலாளர் சேவைக்கு தெரிவானவர்களுக்கு நியமனக்கடிதங்கள் வழங்கி வைப்பு


இலங்கை ஆசிரிய கல்வியாளர் சேவை IIIஆம் தரத்திற்கு தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கும் நிகழ்வு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தலைமையில் இடம்பெற்றது.

கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று இந்த நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது தமிழ் மொழி மூலம் 104 பேருக்கும் சிங்கள மொழி மூலம் 210 பேருக்குமான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மட்டக்களப்பில் இருந்தும் இந் நியமனத்திற்கு தேர்ச்சி பெற்றவர்கள் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.