தேரரால் கழுத்து நெரிக்கப்பட்ட காவற்துறை அதிகாரி உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்ட போதிலும் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த சந்தர்ப்பத்தின் போது , இரத்தினபுரி காவல் நிலையத்தின் காவற்துறை பரிசோதகரும் உடன் சென்றுள்ளார்.
இதன்போது , பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள குறித்த தேரர் கைக்குண்டொன்றை எடுத்து வந்துள்ள நிலையில் , அவரின் கைக்கு தாக்குதலொன்றை மேற்கொண்டு தேரரை கைது செய்ததாக காவற்துறை ஊடக பேச்சாளர் ருவண் குணசேகர தெரிவித்தார்.