இரண்டு மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் !


யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவிகள் இருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் வைத்தீஸ்வராக் கல்லூரியில் தரம் ஏழில் கல்வி கற்கும் மாணவிகள் இருவரை ஆசிரியர் ஒருவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதுதொடர்பில் குறித்த பாடசாலையில் கற்பிக்கும் 48 வயதான ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் இரண்டு பாடசாலைகள் மாணவிகளும், மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும், கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியரை இன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.