பாடசாலை மாணவி தூக்கிட்டு தற்கொலை !


வவுனியா உக்கிளாங்குளம் பகுதியில் இன்று காலை வீடு ஒன்றில் பாடசாலை மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியா உக்கிளாங்குளம் பகுதியில் வசித்து வந்த யோ.மிதுன்ஜா (17) உயத்தரத்தில் கல்வி பயின்ற மாணவி ஒருவர் கடந்த புதன்கிழமை கல்வி பயின்ற பாடசாலையில் இடம்பெற்ற உயர்தர மாணவர்களின் பிரியாவிடை நிகழ்வில் கலந்துகொண்டுள்ளார்.

அன்றிலிருந்து வீட்டில் மாணவியின் செயற்பாடுகளில் சற்று மாற்றம் ஏற்பட்டிருந்ததாகவும் மன அழுத்தத்திலிருந்ததை அவதானிக்க முடிந்துள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு படுக்கைக்குச் சென்ற மாணவி இன்று அதிகாலை 4 மணியளவில் படுக்கை அறைக்கு மாணவியை எழுப்புவதற்குச் சென்ற தாயார் மகள் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளதை அவதானித்துள்ளார்.

இதையடுத்து பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. மாணவியின் இறப்புக்கான காரணம் தெரியவரவில்லை இது தொடர்பாக மேலதிக விசாரணைகளைப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.