ஊறணி பத்திரகாளியம்மன் ஆலய பாற்குடப்பவனி


ஊறணி பத்திரகாளியம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு 14.07.2018 ஆம் திகதி காலை பாற்குடப்பவனி மட்டக்களப்பு செல்வநகர் பிள்ளையர் ஆலயத்தில் ஆரம்பித்து பாற்குடப்பவனி பத்திரகாளியம்மன் ஆலயத்தினை வந்தடைந்தது. 

இதில் பெருமளவு பக்த அடியார்கள் கலந்துகொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது. ஏதிர்வரும் 17.07.2018 ஆம் திகதி அம்பாளின் திருக்கதவு திறக்கப்பட்டு 07ம் நாள் சடங்காக கன்னிக்கால் சடங்கும் 25.07.2018 அதிகாலை 4.00 மணிக்கு தீச்சடங்கும் 27.01.2018 கும்பம் சொரியும் பூஜையுடன் அன்னதானமும் வழங்கப்பட்டு இரவு ஆதிவைரவர் பூஜையும் இடம்பெறும்.. 

பூஜைகளில் கலந்து ஸ்ரீ பத்திரகாளி அன்னையின் திருவருள் பெற வேண்டிக்கொள்கிறோம்.