பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சிகர செய்தி ! தொழிலற்ற அனைவருக்கும் தொழில்வாய்ப்பு !!


தொழில் அற்ற அனைத்து பட்டதாரிகளுக்கும் தொழில் வாய்ப்பை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என இராஜாங்க அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

நான்கு கட்டங்களின் கீழ் இந்த வருடமும், அடுத்த வருடமும் தொழில்வாய்ப்பு வழங்கப்படும் என்று அவர் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த மாதம் 30ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் பட்டப் படிப்பை பூர்த்தி செய்துள்ளவர்களுக்கு தொழில் வழங்கப்படும்.

ஆட்சேர்ப்பின் வயதெல்லை 35 வயதாக இருந்த போதிலும், அமைச்சரவையின் அனுமதியுடன் இந்த வயதெல்லை 45 வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.