பெற்றோல் மற்றும் டீசலின் விலை மீண்டும் அதிகரிப்பு !!


எரிபொருட்களின் விலைகளில் கடந்த வாரம் ஏற்படுத்தப்பட்ட அதிகரிப்பை அவ்வாறே அமுலாக்க ஜனாதிபதியும், நிதி அமைச்சரும் தீர்மானித்துள்ளனர்.

அமைச்சர் ராஜித சேனாரட்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

இன்று ஜனாதிபதி செயலகத்தில் நிதி அமைச்சருடன் எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

இதன்படி, இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் பெற்றோல் 92 ஒக்டேய்ன் லீற்றர் ஒன்றின் விலை 8 ரூபாவினாலும், 95 ஒக்டேய்ன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 7 ரூபாவினாலும், டீசல் லீற்றர் ஒன்றில் விலை 9 ரூபாவாலும், சுப்பர் டீசலின் விலை 10 ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளன.

இந்த விலை அதிகரிப்பானது இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என அமைச்சர் எமது செய்திச் சேவையிடம் தெரிவித்தார்