(ஹுதா உமர்)
அகில இலங்கை YMMA பேரவையின் 68வது வருடாந்த மாநாடு இன்று காலை அட்டாளைச்சேனை அரசினர் கல்வியல் கல்லூரி மண்டபத்தில் YMMA தேசிய தலைவர் தேசபந்து எம்.என்.எம். நபீல் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு நெடுங்சாலைகள் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி அல்ஹாஜ் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் கௌரவ அதிதிகளாக விளையாட்டு மற்றும் மாகாண சபைகள், உள்ளுராட்சி மன்ற விவகார இராஜாங்க அமைச்சர் சிரியானி விஜயவிக்ரம அவர்களும் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் அவர்களும் கலந்து கொண்டனர்.
இந்த 68வது வருடாந்த மாநாட்டில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள உள்ளுராட்சி மன்ற தலைவர்கள்,பிரதி தலைவர்கள், உறுப்பினர்கள், கல்விமான்கள், அமைச்சின் மேலதிக செயலாளர்கள், பிரமுகர்கள் என மேலும் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் உத்தியோக பூர்வமாக இணைய தளம் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் சாதனையாளர்கள் பலரும் , சிறந்த கிளை நிறுவனங்களும் கௌரவிக்கப்பட்டது.