மட்டு நகரில் நள்ளிரவில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய 10 பேர் கைது


(கனகராசா சரவணன்)
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ்பரிவிலுள்ள பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை (16) நள்ளிரவு பொலிசாரின் விசேட திடீர் வீதிச் சோதனை நடவடிக்கையில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய 10 பேரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர் .

குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் முகமாக பொலிஸ் விசேட திடீர் வீதி சோதனை நடவடிக்கை நேற்று வியாழக்கிழமை மட்டு நகரில் இடம்பெற்றது இதன்போது வீதியால் சென்ற அனைத்து வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் நடமாடித்திரிந்தவர்களை வளிமறிக்கப்பட்டு சோதனை நடாத்தினர்

இதன் போது சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய 10 பேரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்